Categories: உலகம்

‘அசைவற்ற’ விக்ரம் லேண்டருக்கு சிக்னல் அனுப்பிய நாசா!

வெளியிட்டது
'அசைவற்ற' விக்ரம் லேண்டருக்கு சிக்னல் அனுப்பிய நாசா! 1
நாசா -ஜேபிஎல் டிப் ஸ்பேஸ் நெட்வொர்க்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய்யத்தால் ஏவப்பட்ட சந்திரயான்2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசா ஆன்டெனாக்கள் மூலம் ‘ஹலோ‘ என்ற செய்தியை நிலவிலிருக்கும் இந்திய லேண்டருடன் தொடர்பு கொள்ள அனுப்பியுள்ளது.

இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாசா தனது ஆழமான விண்வெளி நெட்வொர்க் தரை நிலையங்கள் மூலம் சிக்னலை அனுப்பியுள்ளது. லேண்டருக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பும்போது, ​​சந்திரன் ஒரு வானொலி பிரதிபலிப்பாளராக செயல்படுகிறது மற்றும் 8,00,000 கி.மீ சுற்று பயணத்திற்குப் பிறகு பூமியில் கண்டறியக்கூடிய அந்த சமிக்ஞையின் ஒரு சிறிய பகுதியை திருப்பி அனுப்புகிறது.

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. மேலும் 14 நாட்கள்வரை (செப்டம்பர் 20 -21 வரை) மட்டுமே விக்ரம் லேண்டரின் மேல் சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலையில் அதனிடமிருந்து சமிக்ஞைகள் பெறும் முயற்சியிகள் தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னர் விக்ரம் லேண்டரின் சோலார் பேனல் ஆற்றல் பெறும் என்ற நம்பிக்கை இருக்காது.

நாசா இந்தியாவின் சந்திரன் பணியில் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஏனெனில் விக்ரம் லேண்டரில் “செயலற்ற பேலோட்லேசர் ரிப்ளெக்டர் வரிசை நிறுவப்பட்டுள்ளது. இது லேண்டரின் சரியான இடத்தைக் கண்காணிப்பதற்கும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சரியான தூரத்தைக் கணக்கிடுவதற்கும் உதவுகிறது. ஆனால் லேண்டர் நிலவின் பரப்பில் சிக்கியுள்ளதால் நாசா தனது பேலோட் வரிசை கண்ணாடிகளை இழந்து நிற்கிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்