Categories: சினிமா

எத்தனையோ தடவ கேட்டு பாத்துட்டேன்’க!!ஒரு வாட்டி கூட தனுஷ் ஹெல்ப் பண்ணல!!!உண்மையை பேட்டியில் கூறிய செல்வராகவன்.

வெளியிட்டது

நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது செல்வராகவனுடன் “நானே வருவேன்”, தெலுங்கில் “வாத்தி”, “திருச்சிற்றமபலம்”, ஹோலிவுட்டில் “தி கிரே மேன்” போன்ற படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து இருக்கின்றன.

எத்தனையோ தடவ கேட்டு பாத்துட்டேன்'க!!ஒரு வாட்டி கூட தனுஷ் ஹெல்ப் பண்ணல!!!உண்மையை பேட்டியில் கூறிய செல்வராகவன். 1

இப்போது இவர் இந்த உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவருடைய அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன். ஆரம்பகாலத்தில் அனைவரும் தனுஷை கேலி செய்த போது, அவரை வைத்து “காதல் கொண்டேன்” படத்தை எடுத்து தனுஷும் நன்றாக நடிப்பார் என ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினர். பின்னர் மாஸ் ஹீரோ ஹீரோவாக “புதுப்பேட்டை” மீண்டும் சிறப்பான நடிகராக “மயக்கம் என்ன” போன்ற படங்களில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.

ஒரு 5 ஆண்டுகள் முன்பு செல்வராகவன் படங்களுக்கு என தனியதொரு ரசிகர் கூட்டம் இருந்தன. இவர் இயக்கிய “7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன்” போன்ற படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றன. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான தோல்வி அடைந்தாலும் இப்பொது அதனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு பாகம் எடுக்க சொல்லியும் தொடர்ந்து செல்வராகவனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நடுவில் “இரண்டாம் உலகம், என்.ஜி.கே. போன்ற படங்கள் தோல்வி அடைந்தாலும் இப்போது அவர் நீண்ட வருடங்கள் பிறகு தம்பி தனுஷுடன் சேர்ந்து இயக்கியுள்ள “நானே வருவேன்” படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கு நடுவில் அவர் விஜயுடன் “பீஸ்ட்” படத்தில் நடித்திருந்தார். நல்ல விமர்சங்கள் பெற்றாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் இல்லை. அண்மையில் வெளியான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த “சாணி காயிதம்” படம் பெரும் வரவேற்பை  பெற்றதுள்ளது.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவரின் நடிப்பும் பயங்கரமாக பாராட்டப்பட்டு வருகிறது. நல்ல இயக்குனர் என்பதால் இதெல்லாம் செல்வாவிற்கு சர்வ சாதாரணம் என பலரும் அவருடைய நடிப்பை மெச்சி வருகின்றனர். இப்போது செல்வராகவன் அந்த படத்தில் நடித்ததை குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர்,”நா தனுஷ்கிட்ட அவ்ளோ வாட்டி கேட்டேங்க, எப்படி இப்டி கேமரா முன்னாடி வந்ததும் மொத்தமா மாறிடுறீங்க’னு, ஆனா அவரு கொஞ்ச கூட சொல்லி கொடுக்கல, நீ பொய் நாடி போதும்’னு சொல்லி அனுப்பிட்டாரு, ஏன்  ந கீர்த்தி சுரேஷ் கிட்ட கூட அவ்ளோ தடவ கேட்டேன், ஜாலியா ஜூஸ் குடிச்சிட்டு இருக்கேங்க, கேமரா முன்னாடி எப்படி அப்படி நடிக்குறேங்கன்னு அவுங்களும் சிரிச்சிட்டு ஒன்னுமே சொல்லல, நானாவே கொஞ்ச கொஞ்சமா கத்துக்குட்டேன், ரெண்டு பெரும் நேஷனல் அவார்ட் வாங்குனவங்க, அதுவும் தனுஷ் அவரு ஹாலிவுட் வர போய்ட்டாரு, அப்ப கூட சொல்லித்தரலங்க” என பேசியிருக்கிறார்.

அமேசான் ப்ரைமில் வெளியான இந்த படம் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனுஷுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். இந்த படம் அடுத்து இப்பொது செல்வராகவன் “நானே வருவேன்” படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

Video Courtesy – CineUlagam

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்