
தெலுங்கானா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட அகில-இந்திய-மஜ்லீஸ்-இ-இத்திஹாது-உல்- முஸ்லிமீன் கட்சியின் தலைவரான அசாதுதின் ஓவைசி அவர்கள் இன்று காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
அசாதுதின் ஓவைசி அவர்கள், இந்த நாடக நிறுவனம் (பா. ஜ. க) வெற்றி அடைந்துவிட்டதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்ததேயாகும் என்று கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி போரிடும் எண்ணத்தில் இல்லை. அந்த கட்சி முடிவடைந்த நிலையில் உள்ளதாகவும் கூறினார். இவ்வாறு அவர் வேலைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) குறித்து பாஜக கட்சியைத் தாக்கியுள்ளார்.
மேலும் பா.ஜ.க.விடம் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப் போவதாக கேட்ட போது மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் அவர்கள் தாங்கள் ஆட்சியை பிடித்தால் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தருவதாக கூறியிருந்ததாக ஓவைசி அவர்கள் கூறினார். மேலும் உங்கள் கைகளில் மருதாணி வைத்திருக்கிறீர்களா என்றும் வேலை வாய்ப்பை அளிப்பதிலிருந்து உங்களை யார் தடுத்தார்கள் என்றும் பா.ஜ.க கட்சியை நோக்கிப் பேரணியில் கேள்விகள் எழுப்பியுள்ளார். இது போன்ற பல கேள்விகளை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிளை நோக்கி எழுப்பியுள்ளார்.