Categories: சமூகம்

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு!!

வெளியிட்டது
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு!! 1

இந்த வருடத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று டெல்லியில் காற்று மாசுபாடு மிக அதிக அளவில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏ. கியூ. ஐ) இன்று வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு 315 ஆக இருந்தது. வியாழக்கிழமை மாலை 311 ஆக இருந்தது. நாகரத்தின் பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு “மிகவும் மோசமான” பிரிவில் இருந்தன. இன்னும் சில இடங்களில் “கடுமையான” நிலையை அடைந்தது.

ஆதலால் உச்சநீதிமன்றம் கட்டளையிட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் 10 உறுப்பினர்களைக் கொண்ட மாசு எதிர்ப்பு பணிக்குழுவின் பல பரிந்துரைகள் குறித்து வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பரிந்துரைகளில் அக்டோபர் 26 முதல் 30 வரை டெல்லி-என்.சி.ஆரில் இரவில் கட்டுமானப் பணிகளைத் தடைசெய்தல் மற்றும் குழாய் இயற்கை எரிவாயுவிற்கு மாறாத தொழில்களை மூடுவது ஆகியவை உள்ளடங்கும்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்