Categories: உலகம்

தெற்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரத்தை இலங்கை திறக்கவுள்ளது!

வெளியிட்டது
தெற்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரத்தை இலங்கை திறக்கவுள்ளது! 1

இலங்கை கடந்த 16-ம் தேதி திங்களன்று தெற்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரத்தை திறந்து வைத்தது.

இந்த லோட்டஸ் டவர் என்று அழைக்கப்படும் இந்த கோபுரத்தைக் கட்டுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆனது. இதில் 80% சர்ச்சைக்குரிய பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (பிஆர்ஐ) கீழ் சீனாவால் நிதியளிக்கப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள 350 மீட்டர் உயர 17 மாடி லோட்டஸ் கோபுரத்தில் ஒரு தொலைக்காட்சி கோபுரம், ஒரு ஹோட்டல், தொலைத்தொடர்பு அருங்காட்சியகம், உணவகங்கள், ஆடிட்டோரியம் மற்றும் ஒரு மால் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த கோபுரம் இன்னும் கட்டுமானத்தில் இருந்தாலும், இலங்கை நாட்டின் ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் கோபுரத்தை பொதுமக்களுக்கு திறக்க முடிவு செய்தார்.

ஊடக அறிக்கையின்படி, தெற்காசியாவில் மிக உயர்ந்த தொலைக்காட்சி கோபுரத்தை உருவாக்க சீன அரசாங்கத்தின் லட்சிய பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (பிஆர்ஐ) கீழ் இலங்கை மற்றும் சீனா 2012 இல் லோட்டஸ் கோபுரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சீனா தேசிய மின்னணுவியல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கார்ப்பரேஷன் (சி.இ.ஐ.இ.சி) இந்த கட்டுமானத்தின் பொது ஒப்பந்தக்காரராவர்.

நாங்கள் இன்னும் இந்த திட்டத்தை முடிக்கவில்லை, ஆனால் கோபுரத்தின் சில பகுதிகளை மக்கள் அணுகக்கூடிய வகையில் திறக்க முடிவு செய்துள்ளோம்” என்று இலங்கை ஜனாதிபதி சீரிசேனா அவர்கள் திறப்பு விழாவின் போது கூறினார்.

இந்த கோபுரத்தின் கட்டுமான பணி 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் நிதி சிக்கல்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பல தாமதங்களை எதிர்கொண்டார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்