Categories: சமூகம்

பேனர் விழுந்ததால் இளம்பெண் லாரி மோதி பலி.!

வெளியிட்டது
பேனர் விழுந்ததால் இளம்பெண் லாரி மோதி பலி.! 1

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் வைத்திருந்த அதிமுக பேனர் மேலே விழுந்ததால் தடுமாறிய, இளம்பெண் லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலைகளில் பேனர்அமைக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அரசியல் கட்சிகள் பேனர் வைத்து வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ (23) தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது சாலைக்கு நடுவில் வைத்திருந்த பேனர் மேலே விழுந்துள்ளது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ , பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடா நாட்டிற்குச் செல்வதாக இருந்த இவர், அதற்கான தேர்வை எழுதிவிட்டு, வீட்டிற்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுபஸ்ரீயை பார்த்து, சாலையில் இருந்தவர்களும் கதறி அழுதுள்ளனர். ஆயிரம் கனவுகளோடு தேர்வை எழுத்துவிட்டுச் சென்ற இவரின் உயிரை சாலையில் இருந்த பேனர் பறித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்ணி லாரி ஓட்டுனரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையிலும் இதே பேனரால்தான் ரகு என்ற வாலிபர் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விபத்தையடுத்தும் திருந்தாத கட்சியினர் சாலைக்கு நடுவிலேயே பேனர்களை வைத்து வருகின்றனர். தற்போது பள்ளிக்கரணையில் இருந்த பேனர்கள்கூட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலின் மகன் திருமணத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் எத்தனையோ முறை எச்சரிக்கை கொடுத்தும் பேனர் கலாசாரம் ஓய்ந்த பாடில்லை.சமூகத்தில் இருந்து யாராவது கேள்வி கேட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் அவர்களை மிரட்டுவதே ஆளும் கட்சியினரின் சாதனையாக உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவையே எளிமையாக மீறிவிடும் இவர்கள் பொதுமக்களின் வேண்டுகோளை கேட்கவா போகிறார்கள். இந்த விபத்தின் மூலமாவது பேனர் கலாசாரம் வேரறுக்கப்படுமா என்பதை பார்ப்போம்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்