Categories: சினிமா

23-ஆம் புலிகேசி பிரச்சனை! வடிவேலு குறித்து ஷங்கர் பேச்சு!!

வெளியிட்டது
23-ஆம் புலிகேசி பிரச்சனை! வடிவேலு குறித்து ஷங்கர் பேச்சு!! 1

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருக்கும், காமெடிகளின் பிரம்மாண்டம் நடிகரான வடிவேலுவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சனைகள் மனக்கசப்புகள் நீடித்து வந்தது.

இந்த பிரச்சனைக்கு காரணம், ஊருக்கு தெரிந்த விஷயம் தான். 23-ஆம் புலிகேசி வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்திருந்த நிலையில், அதிலும் வடிவேலுவே நடிக்க முடிவு செய்து அதன்பிறகு சில காரணங்களுக்காக 23-ஆம் புலிகேசியின் 2-ஆம் பாகத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டுவிட்டது தான்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், நடிகர் வடிவேலு உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய காமெடி பேச்சுக்கு, ஷங்கர் விழுந்து விழுந்து சிரித்தது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமில்லாமல், ஷங்கர் அந்நிகழ்ச்சியில் பேசியபோது, குசேலன் படத்தில் வடிவேலு அவர்கள் எப்படி ரஜினி சாரை பார்த்து வியப்பில் நின்றாரோ!! அதே போல் தான் நான் கல்லுரி படிக்கும் போது கமலஹாசனை முதன் முதலில் பார்க்கும் போது வியந்து போய் நின்றேன் என்று கூறினார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே உள்ள பிரச்சனை தீர்ந்துள்ளது என்றும், மீண்டும் இவர்களின் கூட்டணியில் 23-ஆம் புலிகேசியின் 2-ஆம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்