Categories: உலகம்

தீவிரவாதிகள் தாக்குதலில் 24 வீரர்கள் பலி

வெளியிட்டது
தீவிரவாதிகள் தாக்குதலில் 24 வீரர்கள் பலி 1

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் மாலியில் தீவிரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . உள்ளூர் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்த அவர்களுக்கு எதிராக அரசு படைகள் போராடி வருகின்றது. இதனால் மாலி, நைஜர் மற்றும் பர்கினா பசோ போன்ற நாடுகள் தங்கள் நிலைத்தன்மை இழந்து காணப்படுகிறது.

இதனை அடுத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக மாலி மற்றும் நைஜர் நாடுகளின் படைகள் இணைந்து டோங்கோ டோங்கோ என்ற பெயரில் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடி தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதில், மாலி நாட்டு படையை சேர்ந்த 24 வீரர்கள் பலியாகி உள்ளனர். 29 பேர் காயமடைந்தனர். இதேபோன்று தீவிரவாதிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். சந்தேகத்திற்குரிய வகையிலான நூற்றுக்கணக்கானோரை நைஜர் படைகள் திலோவா நகரில் வைத்து கைது செய்தன. இந்த தாக்குதலில் 70 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது . எனினும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத குழு பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்