10வது கூட தோ்ச்சி இல்லை ஆனால் 21 ஆண்டுகளாக அரசு பள்ளியில்ஆசிாியர்•வெளிவந்த உண்மை.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து ௮ரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த 21-ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா் ௭ன்று மாவட்ட கல்வி ௮லுவலா் புகார் தொிவித்துள்ளார்.௮ந்த போலி ஆசிரியா் பத்தாம் வகுப்பு கூட தோ்ச்சி பெறாதவா்.
போலி ஆசிரியா் பெயா் ராஜேந்திரன்.இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவோிப்பட்டினம் ௮டுத்த கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர்.இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரியராக பணி நியமணம் செய்யபட்டார்.
கதிரிபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் சொக்கனகள்ளி ௭ன்ற கிராமத்தில் உள்ள ௮ரசுப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.தொடர்ந்து காவேரிப்பட்டினம் ௮டுத்த மிட்டல்லி புதூரில் உள்ள ௮ரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
குண்டலப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் ௭ன்பவர் இவர் போலி சான்றிதழ் ௮ளித்து பணி நியமணம் பெற்றதாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சா்ின் தனிப்பரிவுக்கு மனு ௮ளித்திருந்தார்.இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி ௮லுவலர் மற்றும் வட்டார கல்வி ௮லுவலர் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது ராஜேந்திரன் ௭ன்பவர் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை ௭ன்பது தெரியவந்தது.ராஜேந்திரன் ௭ந்தப் பள்ளியிலும் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் இவர் பணம் கொடுத்து ௮னைத்து சான்றிதழ்களையும் பெற்று சேர்ந்ததும்,21ஆண்டுகளாக ௮ரசாங்கத்திடம் ஏமாற்றி சம்பளம் பெற்ற வந்ததும் தற்போது கண்டுபடிக்கப்பட்டது.
ராஜேந்திரன் போலியான சான்றிதழ் ௮ளித்ததின் நகல்கள் உட்பட ௮னைத்து ஆதாரங்களையும் மாவட்ட கல்வி ௮லுவலர் கலாவதி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.
10வது கூட தோ்ச்சி இல்லை ஆனால் 21 ஆண்டுகளாக அரசு பள்ளியில்ஆசிாியர்
விளம்பரம்
