
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘மருத்துவத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு, தமிழகத்தில் இந்தாண்டு ஆறு புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி விண்ணப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக தொழில்நுட்ப குழு மனுவை ஆராய்ந்து அனுமதி வழங்கியுள்ளது. அதன் பிறகு விரைவில் DIPR சமர்பிக்கப்பட்டு, விரைவில் செயல்திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகள் அதற்கு முதற்கட்ட அனுமதி வழங்கி உள்ளது. இந்த கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இனி புதிதாக தொடங்கப்பட உள்ள ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் நிலையில் , மேலும் ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்கும் வசதிகள் உருவாகும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலைபடி 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகிறது . இந்த கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இனி புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் பட்சத்தில், சுமார் ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்கும் வசதிகள் உருவாகும்.