தமிழ்த் திரையுலகில் பல பிளாக்பஸஸ்டர் படங்களை இயக்கி மேலும் பல ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை “கைதி” படத்தின் கதையை ஒரு கைதியிடம் இருந்து திருடியதாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று ட்விட்டரில் குற்றம் சாட்டி உள்ளது. 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் “கைதி”. அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “கைதியிடம் களவாடிய கதை கைதி”

என்றும் இயக்குனர் அட்லியுடன் ஒப்பிட்டும் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் கதையை கேரளா சிறையிலுள்ள கைதி ஒருவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கூறியதாகவும் அதற்கு முன்பணமாக ரூபாய் பத்தாயிரம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து “மூடர் கூடம்”

பட இயக்குனர் நவீன் முகமது அலி லோகேஷ்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது ‘உங்களுக்கு ப்ளூ டிக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு இயக்குனர்களையும் குற்றம் கூறுவதற்கு முன் உண்மையான செய்தியை அறிந்து கவனமாகவும் கன்னியமாகவும் பதிவிடுதலே அறம்’. மேலும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் லோகேஷ்க்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.