Watch the video below ‘பிராணயாகலம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அஜ்மல் அமீர். ‘அஞ்சாதே’, ‘திரு திரு துரு துரு’ தமிழ்ப் படங்களில் சிறப்பாக நடித்து பிரபலமானார். கோ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார். பிறகு சில ஆண்டுகளாக சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் ஹிட் ஆகவில்லை.

தற்போது வெளிவந்த நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தில் மிகவும் பயங்கரமான வில்லனாக அருமையாக நடித்ததால் மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இதற்கு முன்பு நடித்த 4 படங்கள் ஏன் நடித்தோம் என்று வருந்தியதாக கூறியுள்ளார். அவற்றில் தமிழ், மலையாள, தெலுங்கு படங்களுமாகும். Watch the video below

கோ படத்திற்கு பிறகு பல ஸ்கிரிப்டுகள் வந்தால் அவை நன்றாக அமையவில்லை என்றும் கூறினார்.அஜ்மல் மருத்துவரும் கூட. பட வாய்ப்புகள் இல்லாத காலத்தில் நெற்றிக்கண் பட வாய்ப்பு வந்தது. மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டுமா என்று சிந்தித்ததாகவும் ஆனால் இது மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதாலும் நல்ல ஸ்கிரிப்ட் என்பதாலும் நடித்துள்ளார். Watch the video below – video embeded credits to Behindwoods youtube channel