ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான ஏஜி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. அறிவு என்கிற பேரறிவாளன் ஜூன் 11, 1991 அன்று கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. சதித் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசனுக்கு இரண்டு 9 வோல்ட் ‘கோல்டன் பவர்’ பேட்டரி செல்களை வாங்கியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த ஆண்டு மே 21 அன்று ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வெடிகுண்டில் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டன.
பேரறிவாளனுக்கு 1998-ல் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அடுத்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது, ஆனால் 2014-ல் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2018-ல், பேரறிவாளன் சிபாரிசு இருந்தும் விடுதலை தாமதம் ஆனதால், நீதிமன்றத்தை அணுகினார். அவரது தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.