சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது! வானிலை ஆய்வு மையம் தகவல்!! 1

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் கேரள மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்து வரும் 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

விளம்பரம்

கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு,கோடம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கன்னியாகுமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment