பாக்கியாவை திருமணமாகி, தன்னுடைய மூத்த மகனுக்கும் திருமணமான நிலையிலும் கோபி தன்னுடைய பழைய காதலை மறவாமல் இருக்கிறான். கல்லுரியில் உடன் படித்த ராதிகாவை காதலித்து இருக்கிறான். இப்பொது அவளுக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனா நிலையில் மீண்டும் ஆவலுடன் சேர்ந்து வாழ ஆசை படுகிறான் கோபி.

சில நாட்கள் முன் வரும் குன்னக்குடி உறவினர்கள் இந்த விஷயத்தை அறிந்து, ராதிகாவின் குழந்தையின் டீச்சரானா பாக்கியாவிடம் இந்த விஷயங்களை கூற முடியாமல், ராதிகாவிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள். விஷயம் அறிய ராதிகா பாக்கியாவிற்கு துரோகம் செய்ய முடியாமல், கோபியை ஒதுக்குகிறாள். அப்போது கோபம் முறும் கோபி, ராதிகாவின் முன்னாள் கணவன் ராஜேஷை அடித்துவிடுகிறான்.

அதே நேரம் ராதிகா பாக்கியாவிடம் தான் இந்த ஊரை விட்டுவிட்டு, மும்பை போக போவதாக கூறுகிறாள். ராதிகாவிற்கு மட்டுமே தெரியும் கோபி தான் பாகியாவின் கானவன் என்று. பாகியாவிற்கு தன கானவன் பழகி கொண்டிருக்கும் பெண் ராதிகா என தெரிவதில்லை. கோபத்தில் ராஜேஷ் நேராக கோபி வீட்டிற்கு உண்மைகளை கூறி விடுகிறான். அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, உடனே கோபியை வீட்டிற்கு அழைக்க, பதட்டத்தில் கோபி விபத்தில் சிக்குகிறான்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் கோபியை பார்க்க பாக்கியாவும், ராதிகாவும் ஒரே நேரத்தில் வந்தாலும் தள்ளி தள்ளி அமருவதால் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் நர்ஸ் யாரு கோபியோட மனைவி என கூப்பிட, ராதிகா எழுத்து சென்று “நான்தான்” என சென்று கை எழுத்து போடுகிறாள். அந்த இருக்கும் பாக்கிய இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள்.

உள்ளே சென்றுள்ள ராதிகாவின் கையை பிடித்துக்கொண்டு கோபி, “நீ இல்லாம ந செத்துருவேன்” என கெஞ்சுகிறான். கதவு அருகில் இருந்து இது அனைத்தையும் பார்த்து செய்வது அறியாமல் தவிக்கிறாள் பாக்கிய. தனக்கு துரோகம் செய்துள்ளது, ராதிகா தான் எனவும், துரோகம் செய்யும் கணவனை நினைத்து அதிர்ச்சியில் செய்வது அறியாமல் தவிக்கிறாள். அந்த விடியோவை நீங்களும் காண…
Video Courtesy – VijayTelevision