ராதிகா சரத்குமாரும் வரலட்சுமியும் சேர்ந்து கொண்டு துபாயில் செம்ம அலப்பறை செய்யும் வீடியோவை தற்போது ராதிகாவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அங்கு இருக்கும் உயர்தர மாலுக்கு சென்ற அவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோவை பகிர்ந்து இருக்கின்றனர். மிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார். சரத்குமாருக்கு ஏற்கனவே 1984 ஆம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் ஆகி வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களின் திருமணம் வாழ்க்கை கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முடிவுக்கு வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் சரத்குமார் ரேடான் நிறுவனத்துடன் இணைந்து கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரேடான் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த ராதிகா விற்கும் சரத்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ராதிகாவும் சரத்குமாரும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். ராதிகாவிற்கு ஏற்கனவே மலையாள நடிகர் பிரதாப் போத்தனனுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராதிகா அவர்களுக்கு ரயான் என்கிற மகள் இருக்கிறார். ரயானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அடிக்கடி பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ராதிகா.

மேலும் குடும்பத்தினருடன் அனைவருடனும் டூர் செல்வது, அவுட்டிங் செல்வது என்று மிகவும் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் ராதிகா – சரத்குமார் குடும்பத்தினர். இந்த நிலையில் இன்று சரத்குமாரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகள் வரலட்சுமியும் ராதிகாவும் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஷாப்பிங் செய்வது, அவுட்டிங் செல்வது என்று ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வரலட்சுமி பதிவிட்டு வருகிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். ! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O