பிக்பாஸ் ஜனனி தற்போது காஷ்மீரில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதனால் அவர் லியோ படத்தில் நடித்து இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஜனனி தளபதி விஜய்க்கு தங்கை அல்லது மகள் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனனி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இலங்கையை சேர்ந்தவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜனனி குணசீலன். இவர் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் இவரை பின்தொடர தொடங்கினர். தொடர்ந்து டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வந்தார் ஜனனி.

இந்த நிலையில் ஜனனிக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் ஜனனி. ஆரம்பம் முதல் தனியாக விளையாடி வந்த ஜனனி, ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து கொண்டு நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாட தொடங்கினார்.

இதனால் ஜனனிக்கு குறைந்த வாக்குகளை அளித்து மக்கள் ஒரு கட்டத்தில் வெளியேற்றி இருந்தனர். ஆனால் இலங்கையைச் சேர்ந்த பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வெளியேற்றம் நியாயம் இல்லாமல் நடந்திருப்பதாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

வெளியே வந்த பின்னர் ஜனனி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் நடந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிலையில் ஜனனி தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் காஷ்மீரிலிருந்து பனிமலையில் எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதனால் ஜனனி லியோ படத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவலை தற்போது உறுதியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஜனனி லியோ படத்தில் விஜய்க்கு மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜனனி காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருப்பதால் அவர் லியோ படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை நெட்டிசன்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்தோ, ஜனனி தரப்பிலிருந்தோ இதுவரை அவர் லியோ படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.