சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனுக்கு எதிராகவும் ஜீவானந்தத்திற்கு ஆதரவாகவும் வாதாடுமாறு சாரு பாலாவை ஜனனி அழைக்கிறார் சாருபாலா என்ன முடிவெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. சின்னத்திரை உலகின் டாப் ஹிட் சீரியல்களில் முதலிடம் பிடித்துள்ளது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த அப்பத்தா ‘கிரீடம்’ என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தி விட்டு மீதமுள்ள பங்குகளை தனது கொள்ளு பேரன்களுக்கு எழுதி வைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவருக்கு பாலில் எதையோ கலந்து கொடுக்கிறார் ஆதி குணசேகரன். மயங்கி அப்பத்தாவை மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறிவிட்டு அவரை காரில் எடுத்துக் கொண்டு ஓடுகின்றனர். பின்னர் கார் வெடித்து அப்பத்தா இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆதி குணசேகரன் தொடுத்த புகாரின் பேரில் ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆனால் அப்பத்தா இன்னும் இறக்கவில்லை என்றும் அவர் மீது வருவார் எனவும் மருமகள்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களும் அதே போல அப்பத்தாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜீவானந்தத்திற்கு ஜாமீன் வழங்குவதில் சிக்கல் இருப்பதாக வக்கீல் கூற, நல்ல திறமையான வக்கீலை தேர்ந்தெடுத்து ஜீவானந்தத்தைக்காக வாதாடி அவரை வெளியில் எடுக்க ஜனனி திட்டமிடுகிறார். அதற்காக ஆதி குணசேகரனின் பரம எதிரியாக இருக்கும் சாருபாலாவை அவர் அணுகுகிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV