சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றையக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சித்தார்த்தை காணவில்லை என்கிற உண்மையை உமையாள் ஆதி குணசேகரனிடம் கூறுகிறார். எனவே ஆதி குணசேகரன் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சியை தள்ளி வைத்துவிட்டு, தர்ஷினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரன் தனது மகள் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்துக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். ஆனால் இந்த சமயம் பார்த்து சித்தார்த் காணாமல் போய்விடுகிறார். அதே சமயம் ஜனனி, அவரது தங்கை, அவரது தாயார் ஆகியோரும் காணாமல் போய்விடுகின்றனர். அடிக்கடி யாராவது காணாமல் போய்க்கொண்டே இருப்பது போல கதை மெதுவாக நகர்ந்து வருகிறது. இல்ல நிலையில் சித்தார்த் இல்லாததால் திருமணம் நின்று போயிருக்கிறது. இந்த உண்மையை தற்போது உமையாள் குணசேகரிடம் கூறுகிறார்.

மேலும் தர்ஷினியை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது வாசலில் காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தான் நீங்கள் உள்ளே போக வேண்டும் என்று குணசேகரனை மடக்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv