சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது அஞ்சனாவுக்கும், சித்தார்த்துக்கும் திருமணம் செய்து வைக்க கதிர் மற்றும் சக்தி இருவரும் ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் அனைவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து கிளம்பி செல்ல திட்டம் தீட்டி வருகின்றனர். இதை குணசேகரன் ஒருவாறு தெரிந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் எங்கேயோ தொடங்கிய ‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது எங்கேயோ சென்று விட்டது என தான் கூற வேண்டும். இயக்குனர் கதைக்களத்தை எங்கெங்கியோ நகர்த்தி வருகிறார். உமையாள் மகன் சித்தார்த்தை தர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வரும் நிலையில் அவர் ஜனனியின் தங்கை அஞ்சனாவை காதலித்து வருகிறார். எனவே வீட்டில் உள்ள அனைவரும் அஞ்சனாவுக்கும் சித்தார்த்துக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். இதற்காக கதிர் மற்றும் சக்தி இருவரும் சித்தார்த்தை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணத்தை முடிக்க கதிர் மற்றும் சக்தி இருவரும் ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv