கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா ஆகிய இருவரும் இணைந்து தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருப்பதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.

1997ம் ஆண்டு தமிழில் வெளியான ‘புத்தம் புது பூவே’ என்கிற திரைப்படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். ஆனால் அப்போது அவருக்கு மிகப்பெரிய ரீச் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் 2001ம் ஆண்டு வெளியான ‘பாண்டவர் பூமி’ படத்தில் வந்த “தோழா தோழா..” என்கிற பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ‘சாமி’ படத்தில் இடம்பெற்ற “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா..” என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தொடர்ந்து ‘ஆட்டோகிராப்’, ‘மன்மதன்’, ‘பேரழகன்’, ‘பருத்திவீரன்’, ‘படிக்காதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற பல படங்களில் பாடலை எழுதியிருக்கிறார். தற்போது சில படங்களில் பணியாற்றி வரும் அவர், கமலஹாசனின் கட்சியிலும் பணியாற்றி வருகிறார். நடிகை கனிகாவை 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவி கனிகாவுடன் இணைந்து “சினேகம் ஹெர்பல்ஸ்” என்கிற கம்பெனியை தொடங்கி இருக்கிறார்.

இதன் மூலமாக ஹெர்பல் ஹேர் ஆயில் விற்பனையை அவர் துவங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார். ரசிகர்களின் ஆதரவை கோரி இருக்கிறார் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!
View this post on Instagram