விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பசுபதி கொடுத்த பணத்தை தொலைத்தது குமரன் தான் என்கிற உண்மையை கங்கா தற்போது தெரிந்து கொள்கிறார். அவர் கண்ணீர் மல்க காவேரியுடன் இணைகிறார். காவிரியை கட்டிப்பிடித்து அழுகிறார். இதனால் நீண்ட நாள் சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கா காவேரி குடும்பத்தின் பரம எதிரியாக இருக்கும் பசுபதி கொடுக்கும் பணத்தை கங்காவின் கணவர் குமரன் தொலைத்து விடுகிறார். ஆனால் குமரனுக்கும், கங்காவுக்கும் சண்டை வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த பழியை காவேரி ஏற்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக இந்த உண்மை தெரியாமல் கங்கா காவேரியை வெறுக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பணத்தை தொலைத்தது நான் தான் என உண்மையை குமரன் கங்காவிடம் போட்டு உடைக்கிறார்.

இந்த உண்மை தெரிந்த கங்கா காவேரியை ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அழுகிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சகோதரிகள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television