தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவரின் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்கள் அப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்றாலும் தற்போது இப்படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்தளவிற்கு இவரது படங்கள் தற்போதைய ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் இயக்குனர் என்பதை தாண்டி தற்போது நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து சாணிக்காயிதம் , பீஸ்ட், ராயன் என படங்களில் நடித்து நடிகராக அசத்தி வருகிறார் செல்வராகவன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இறுதியாக இவர் தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது இவர் இயக்கி வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி வேதனையுடன் பேசியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அந்த படத்தை கண்டு கொள்ளவில்லை எனவும் , அந்த படத்தால் தான் பட்ட ரணங்கள் காயங்கள் குறித்து வேதனையுடன் பேசி இருக்கிறார் செல்வராகவன். இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
View this post on Instagram