தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்க கூடியவர் தளபதி விஜய். முடிசூடா மன்னனாக தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். இவர் படங்கள் தற்போது மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டு இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் முதல் நாளே நூறு கோடி வசூலை தாண்டும் அளவுக்கு இருக்கிறது. இப்படி சினிமாவில் நடிகராக விஜய் இருக்க, தற்போது அவரது மகன் ஜேசன் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே போடப்பட்ட நிலையில், படத்திற்கு கதாநாயகன் தேடும் வேலையே தீவிரமாக செய்து வருகிறார் ஜேசன். நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தான் முதல் படத்தை இயக்க இருப்பதாக பல தகவல்கள் இவர் படம் குறித்து வெளிவந்தது. தற்போது இவர் இயக்கும் படம் குறித்து எந்த அப்டேட்டும் வரவில்லை.

இந்நிலையில் தமிழில் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படம் மூலம் பிரபலமாகி இருக்கும் சந்தீப் கிஷனை வைத்து புதிய படத்தை ஜேசன் இயக்க இப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
