குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பரியங்கா இடையே வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் மணிமேகலை மீது தவறு இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விஜய்டிவி பிரபலங்கள் அனைவரும் ப்ரியங்காவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா இதுகுறித்து பேசும்பொழுது, பிரியங்கா தனக்கு போன் செய்து அழுததாகவும், தான் இதுபோல செய்யவில்லை என கூறியதாகவும் வனிதா தெரிவித்து உள்ளார். மேலும் மணிமேகலை சொம்புகளை தூக்கிபோடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மணிமேகலை அடுத்தவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து கருத்து சொல்ல கூடாது, இது இருவருக்குமான சண்டை அவர்களே முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் வனிதா விஜயகுமார் ஆதங்கமாக கருத்து தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேட்டி இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.