தனது கணவருடன் இணைந்து புது தொழிலை தொடங்கிய ‘கயல்’ சீரியல் நடிகை அபி நவ்யா.! புகைப்படங்கள் இதோ

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் கயலின் தங்கையாக நடித்து வரும் அபிநவ்யா தற்போது தனது திருமண நாளில் புதிய தொழிலை தொடங்கி இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருக்கிறார். பலரும் அபிநவ்யாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தனது கணவருடன் இணைந்து புது தொழிலை தொடங்கிய 'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யா.! புகைப்படங்கள் இதோ 1

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ என்கிற தொடரில் சுவாதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிநவ்யா. தொடர்ந்து ‘கண்மணி’ தொடரிலும் நடித்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது ‘கயல்’ சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.


இவருக்கும் ‘திருமணம்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘ஈரமான ரோஜாவே 2’ போன்ற சீரியல்களில் நடித்த நடிகர் தீபக்கிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. துருவன் என பெயரிட்டு இருப்பதாக கூறி புகைப்படங்களையும் பகிர்ந்து அறிவித்திருந்தார் அபிநவ்யா.

தீபக் – அபிநவ்யாவிற்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது தனது கணவருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார் அபி. அதில் கொளத்தூர் அருகே இண்டோர் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுப்பதற்கான “டி ஸ்டூடியோஸ்” என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.


இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் தீபக், “இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என்னுடைய தோழியே, பல தடைகளை தாண்டி இந்த இடத்திற்கு நாம் வந்திருக்கிறோம். மிக உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான விஷயங்களை விரைவில் தீர்மானிப்போம். இன்னும் பல அப்டேட்டுகள் விரைவில் உங்களுக்காக” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் அபிநவ்யா மற்றும் தீபம் ஜோடிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்