சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் அது பயில்வான் ரங்கநாதன் தான். பல படங்களில் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு பெயரை பெற்றவர். தற்போது நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர பத்திரிகையாளராக மாறி பணியாற்றி வருகிறார். பல யூடியூப் செனல்களுக்கும் இவர் நடிகைகள் அந்தரங்கத்தை பற்றி கொடுக்கும் பேட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் இவர் நடிகை ரேகா நாயர் குறித்து பேசி இருந்தது மிகப்பெரிய பூகம்பத்தையே கிளப்பி இருந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டு இருந்தது. இது இணையத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி இருந்தது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது.
இந்த திருமணத்திற்கு நடிகர் பார்த்திபன் வந்து உள்ளார். இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பயில்வான் மகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.