கன்னட படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகிய நடிகை ப்ரணிதா , தமிழில் உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்று தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த சகுனி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

பின்னர் தமிழ் படங்களில் வாய்ப்பில்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ப்ரணீதா. இவருக்கு திருமணம் முடிந்து மகள் ஒருவர் உள்ள நிலையில் தற்போது அண்மையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவருக்கு இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு உள்ளது. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு ப்ரணிதாவை வாழ்த்தி உள்ளனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.