Categories: சினிமா

திருமணமாகி மூன்றே மாதத்தில் நடிகை பூர்ணாவுக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு.! வீடியோ இதோ.!

வெளியிட்டது

நடிகை பூர்ணாவிற்கு கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு மிகப்பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் சம்னா காசிம் ஆகும்.

திருமணமாகி மூன்றே மாதத்தில் நடிகை பூர்ணாவுக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு.! வீடியோ இதோ.! 1

இஸ்லாமியரான இவர் பூர்ணா என்கிற அடையாளத்துடன் படங்களில் நடித்த தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் முதல் முறையாக இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்கிற படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். பின்னர் பூர்ணாவிற்கு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தற்போது தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படத்தில் அவர் அதிகமாக நடித்து வருகிறார். முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை தொடர்ந்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான், லாக்கப் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூர்ணா.

2021-ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் ஜெயலலிதாவின் தோழியாக வி கே சசிகலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஹீரோயினாக நடித்ததை காட்டிலும் பேய் படங்களில் அதிகமாக நடித்து வருவதால், தனியார் பத்திரிகை ஒன்று அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது அவனு (2012) மற்றும் தொடர்ச்சியாக அவனு 2 (2015) ஆகிய இரண்டு படங்களில் பேயாக நடித்து பாராட்டுகளை பெற்றார் பூர்ணா.


தற்போது அவர் சுமார் ஆறு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, பேசும் படம் போன்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, மலையாளங்களிலும் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் கேரளாவை சேர்ந்த தொழிலதிபரான சாணித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் கேரளாவில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பூர்ணா instagram பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திருமணம் ஆகி 2 மாதங்களில் டிசம்பர் மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த வருடம் எனக்கு மிகவும் மிகுந்த சிறந்த ஆண்டாக அமைந்தது, அல்லாஹ் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளான். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி என்று சொல்லி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விரைவில் தாயாகப் போகிறேன் என்று பதிவிட்டு இருந்தார் பூர்ணா.

இந்த நிலையில் இன்று அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் வளைகாப்பு நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். சிகப்பு நிற புடவையில் அவர் தேவதை போல் அமர்ந்திருக்கிறார். அவருடன் அவரது நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Myself Chinnaaty

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்