தமிழ் சினிமாவில் நாயகி வில்லி என கலக்கி வருபவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர். இப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றது. இவரின் உச்சகட்ட நடிப்பு பலராலும் பாராட்டி பேசப்பட்டது. தாரை தப்பட்டை படத்தில் கவனம் ஈர்த்த இவர் முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார் வரலக்ஷ்மி. தமிழில் நாயகி மற்றும் வில்லி என நடித்து அசத்தி உள்ளார். இவர் வில்லியாக நடித்த சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிகோலாய் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
தற்போது இவர் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கணவருடன் மிடுக்கான தோற்றத்தில் சென்று அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வரலக்ஷ்மி மற்றும் அவரின் கணவர் ஜோடிப்பொருத்தம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.