சின்னத்திரையில் நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் ராஜா ராணி என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தவர்கள். ஆல்யா செம்பா என்ற கதாபாத்திரத்திலும், சஞ்சீவ் கார்த்திக் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். வீட்டில் வேலை செய்யும் ஏழைப் பெண்ணான செம்பாவை காதலித்து கரம் பிடிப்பார் கார்த்திக். இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆல்யா வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். வீடியோ கீழே உள்ளது..

பிறகு இருவரும் மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஐலா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். அர்ஷ் பிறந்து ஒரு மாதங்களே ஆகிறது. ஆல்யாவின் இரண்டாவது வளைகாப்பின் போது தான் ஐலாவிற்கு சமீபத்தில்தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பார்ப்பதற்கே மிக அழகாக, பொம்மை போல் இருக்கும் ஐலா செய்யும் குறும்புகளை சஞ்சீவ், ஆல்யா அவ்வபோது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம். ஐலாவின் வீடியோக்கள் லட்சம் பார்வையாளர்களை அள்ளும். Youtube Video Code Embed Credits: Alya Sanjeev
இவர்களின் யூடியூப் சேனலில் vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் சேர்ந்து கோயம்புத்தூரில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றுள்ளனர். அங்கு ஐலா, ஆல்யா அனைவரும் சேர்ந்து தண்ணீரில் ஜாலியாக ஆட்டம் போடுகின்றனர். ஐலா அங்குள்ள விளையாட்டுகளில் விளையாடுகிறார். செம்ம Fun நிறைந்த அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..