Categories: சினிமா

நீ என்ன அவளோ பெரிய ஆளா? அவமானப்படுத்திய அஞ்சலியை கழுவி ஊற்றிய பாண்டி | Anjali

வெளியிட்டது

கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாண்டி. இந்த தொடருக்குப் பின் அங்காடித் தெரு படத்தில் நடித்தார். இதன் மூலம் பிரபலம் ஆனார் அதன் பின்னர் பெரிய அளவில் எந்த படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. சில படங்களில் வடிவேலு உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவருடன் அங்காடித் தெரு படத்தில் இணைந்து பணியாற்றியவர் நடிகை அஞ்சலி. அஞ்சலியைப் பற்றி பாண்டி கொடுத்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ என்ன அவளோ பெரிய ஆளா? அவமானப்படுத்திய அஞ்சலியை கழுவி ஊற்றிய பாண்டி | Anjali 1

அஞ்சலியை பொறுத்தவரை 2007ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் அஞ்சலி. இதனால் அவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது. பிறகு 2010ம் ஆண்டு அங்காடித் தெரு வெளியானது. யாதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். பிறகு எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கலகலப்பு, சிங்கம் 2 போன்ற நல்ல படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வருகிறார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

அஞ்சலியைப் பற்றி பாண்டி அளித்துள்ள பேட்டியில் அஞ்சலியும், தானும் அங்காடித் தெருவுக்கு முன்பே நண்பர்கள் என்றும், ஆனால் சமீப காலமாக நான் போன் செய்தால் எடுப்பதில்லை, ஒரு நாள் மலேசியா செல்லும் போது அஞ்சலியை சந்திக்க நேர்ந்தது, அப்போது போன் செய்தால் உன் மேனஜரிடம் பேச சொல்கிறாய் என திட்டினேன், பிறகு அஞ்சலி அவருடைய நம்பரை கொடுத்தார். பிறகு அந்த நம்பருக்கு 4 முறை அழைத்தும் எடுக்கவில்லை என்றும், சினிமாவில் உச்சிக்கு போய்விட்டால் இந்த மாதிரி செய்ய தோன்றுமோ என தெரியவில்லை என்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தை வருத்தத்துடன் கூறினார். அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்