இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இன்று தனது குடும்பத்துடன் இணைந்து பிஎம்டபுள்யூ காரை வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் முருகதாஸ். தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ‘பூச்சுடவா’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். பின்னர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ‘வாலி’, ‘குஷி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளர்களாக வலம் வரும் ஏ.ஆர் முருகதாஸ். ‘தீனா’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ந்து ‘கத்தி’, ‘சர்க்கார்’, ‘தர்பார்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்துள்ளனர்.
முருகதாஸின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கும் ரம்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தனது குடும்பத்துடன் சென்று BMW உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஆகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் உயர் ரக காரை வாங்கியிருக்கும் முருகதாஸுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.