பிரபல இயக்குனர் அட்லீ தன் மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் “ராஜா ராணி”. இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் முதல் படத்தை இயக்கி வெற்றியை கண்டவர்.

தொடர் வெற்றி படங்கள் விஜய்க்கு கொடுத்து, அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப் போன இயக்குனராக மாறிப் போனார். மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து சன் பிக்சரஸ் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா என பலர் நடிக்க வெளியான இந்த “பிகில்” படம் விமர்சகர்களிடம் இது பயங்கர காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்று விமர்சிக்க பட்டாலும் மீண்டும் விஜயுடைய அதிக கலெக்ஷன் செய்த படமாக இது உருவெடுத்து. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை வாரி குவித்தது இந்த படம்.
இப்பொது பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் பணிபுரிந்து வருகிறார். எவ்ளோ விமர்சனனால் வைக்கப்பட்டாலும் இன்று இந்திய அளவில் மிக முக்கிய நடிகரை கொண்டு மிக முக்கிய படத்தை எடுத்து வருகிறார் அட்லீ. இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்து இருக்கிறார் அட்லீ. அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அட்லீயும் ப்ரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியா கர்ப்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.