விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் நடிகை பிரசவிக்கவே ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார்.

இரண்டாவது குழந்தையாக பெண் குழ்நதை பிறக்க அவளுக்கு ஆய்லா, என பெயர் வைத்துள்ளார் இந்த தம்பதிகள். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் மீகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை விடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ள அவர், தனது மகள் அய்லாவுடன் ஒரு மால் வளாகத்தில் யானை சிலைகளுக்கு முன் நின்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை அய்லா, ஆல்யா செய்வது போலவே அழகாக போஸ் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து தாய் சேய் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தாயை போல சேலை, ஆலியா போல ஆய்லா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஆலியா அடுத்து எப்போது நடிக உள்ளார் என்பது தெரியவில்லை. நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். குழ்நதை பிறந்து சில மம்தங்கள் ஆகிவிட்டதால் விரைவில் நடிகை ஆலியா நடிக வருவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.