என்னை Divorce பண்ணிட்டு உன் குடும்பத்தோட போய் சேரு..! ராதிகா பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த கோபி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல குடும்ப தலைவிகளையும் ரசிகர்களாக கொண்ட தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யத்தை இயக்குனர் அதிகரித்து கொண்டே செல்வது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்னை Divorce பண்ணிட்டு உன் குடும்பத்தோட போய் சேரு..! ராதிகா பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த கோபி..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ராதிகாவை பார்த்து நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தியோ அப்பொழுதே குடும்பம் அழிந்துவிட்டது என கூறுகிறார். இதனால் கடுப்பாகிய ராதிகா அப்போ என்னை விவாகரத்து பண்ணிட்டு கிளம்பு என கூறவே அதனை கேட்டு கோபி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். மேலும் தனது குடும்பம் சந்தோசஷமாக இருப்பதை பார்த்து ஏங்குகிறார்.

மேலும் குடித்துவிட்டு வீட்டில் இருந்து பாடல் பாடி ராதிகாவை வெறுப்பேத்துகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. கோபியின் நிலையை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்