விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது பாக்கியா கடைமீது வீண் பழி சுமத்தி கோபி கடையை மூட வைத்து உள்ளார். இதனால் பாக்கியா கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாக்கியா கடைக்கு சீல் வைத்து உள்ளனர். அதே சமயம் மகளை பாக்கியாவிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டு உள்ளார் கோபி. மகளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். மேலும் மகளை நடனப்பள்ளியில் சேர்த்து விடுகிறார்.
தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், இனியா நடனப்போட்டியில் ஜெயித்து தனது வெற்றிக்கு காரணம் கோபி தான் என கூறி பாக்கியாவை அசிங்கப்படுத்தி மேடை ஏறுகிறார். இதனால் பாக்கியா கடும் சோகம் அடைகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இனியாவின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION