மயூவுக்கு நடக்கும் பூப்புனித நீராட்டு விழா.! கண்கலங்கி அழும் கோபி.! இன்றைய ப்ரோமோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய ப்ரோமோவில் மயூவுக்கு சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது மயூவைப் பார்க்கும் கோபி கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டாப் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோ கோபிக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். மூத்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகா உடனும் அவரது மகள் மயூவுடனும் வாழ்ந்து வருகிறார் கோபி. இந்த நிலையில் தற்போது மயூ பருவம் அடைந்திருக்கிறார். அவருக்கு சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மயூவுக்கு நடக்கும் பூப்புனித நீராட்டு விழா.! கண்கலங்கி அழும் கோபி.! இன்றைய ப்ரோமோ.! 1

அப்போது ராதிகாவின் தாயார் ராதிகாவின் அண்ணன், அண்ணி என அனைவரும் மயூவுக்கு சடங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர். மயூ கன்னத்தில் நலங்கு வைத்தும் அட்சதை தூவியும் மயூவை வாழ்த்தி கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவையும் நலங்கு வைக்குமாறு அவரது தாயார் அழைக்க ராதிகாவும் சென்று நலங்கு வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எமோஷனலான கோபி திடீரென கண்கலங்கி அழுகிறார். அதை பார்த்த ராதிகா என்ன ஆச்சு கோபி என்று கேட்கிறார்.

அப்போது கோபி நான் முதன்முதலாக உன்னை சந்தித்தபோது மயூ சின்ன குழந்தையாக இருந்தார். இப்போது அவர் வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டார், காலம் இவ்வளவு வேகமாக ஓடுகிறதே என்று சொல்லி எமோஷனல் ஆகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்