தன்னைப் போலவே தன் மகளையும் சினிமாவில் களமிறக்கும் தாமிரபரணி நடிகை!

வெளியிட்டது

குழந்தை நட்சத்திரமாக மலையாளச் சீரியலிகளிலும் தென்னிந்திய மொழிப் படங்களிலும் அறிமுகமானவர் நடிகை பானு என்கிற ‘எல்சா ஜார்ஜ்’. இவர் மலையாளத்தில் முதலில் நடித்து பிறகு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். ‘தாமிரபரணி’ படத்தில் நடித்ததன் மூலம் ‘பானு’ என்ற பெயரில் பிரபலமானார். மலையாளத் திரையுலகில் ‘முக்தா’ என்று அழைக்கப்படுகிறார். இவர் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.

தன்னைப் போலவே தன் மகளையும் சினிமாவில் களமிறக்கும் தாமிரபரணி நடிகை! 1

பின்னர் அழகர் மலை, பொன்னர் சங்கர், சட்டப்படி குற்றம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க எனப் பலத் திரைப்படங்களில் நடித்தவர். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ‘சகுந்தலாவின் காதலன்’ என்னும் தமிழ்ப் படத்தில் நடித்தார். பானு 2015 இல் மலையாளப் பாடகி ரிம்மி டாமியின் சகோதரர்

‘ரிங்கு டாமியை’ மணந்தார். இருவரும் 2016இல் பெண் குழந்தை பிறந்தார். கியாரா என்று அழைக்கப்படும் அவருடைய மகளுக்கு தற்போது ஐந்து வயது ஆகிறது. இந்நிலையில் தன் குழந்தையை ‘பத்தாம் வளவு’ என்ற மலையாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யவுள்ளார். யுஜிஎம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பிரபல மலையாள இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்