திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் கிளம்பி சென்னைக்கு வருவதுண்டு. அதுபோல் சிறிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது சின்ன திரையை கலக்கி கொண்டிருக்கும் ஒரு நபர் தான் தாமரைச்செல்வி. வறுமையான குடும்பம் அக்கா, தம்பி, அண்ணன், தங்கை என பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு சிறு வயதிலேயே குடும்பத்தின் பாரத்தை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். குடிசை வீட்டில் மிக ஏழ்மையான சூழ்நிலையாக இருந்த போதிலும், உழைப்பால் உயர வேண்டும் என்று தெருக்கூத்து நாடகங்களில் நடன கலைஞராகவும், காமெடி கலைஞராகவும் இருந்து வந்தார் தாமரைச்செல்வி. இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை. நடு இரவு ஆனாலும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தன்னுடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்வேன் என்று பலமுறை அவர் கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட தாமரைச்செல்விக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பலராலும் அறியப்பட்டார். இவர் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் தங்களது பிரார்த்தனைகளை வைத்து நிகழ்வுகளும் உண்டு. ஆனால் இவர் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது தெருக்கூத்து கலைஞர் ஏன் முன்னுக்கு வரக்கூடாதா என்று பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர். ஆனாலும் மனம் தளராத தாமரைச்செல்வி தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். இதிலும் இவரால் வெற்றி பெற முடியும் முயலவில்லை.
பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்று நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதிலும் தனது கணவர் பார்த்திபனுடன் இணைந்து நடனமாடி வருகிறார். தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இருவரும் மிக சிறப்பாக நடனம் ஆடி இருக்கின்றனர். இதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் எழுந்து நின்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண… Watch the below video…
YouTube Video Code Embed Credits: Vijay Television