விஜய் டிவி மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான மோதல் கடுமையாக வெடித்து உள்ளது. இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மணிமேகலையை விரட்ட திட்டம் போட்ட பிரியங்கா இப்படி பட்டவரா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரியங்காவை தற்போது நெட்டிசன்கள் கடுமையாக திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மணிமேகலைக்கு ஆதரவாக தற்போது பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.பல பிரபலங்களும் தைரியமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா இந்த சண்டை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இங்கு மட்டுமில்லை இதுபோன்ற குரூப்பிஸம் ஐடி கம்பெனிகளில் கூட நடக்கிறது.
ஒருவர் டாமினேட் செய்வதும் ஒருவர் வெடித்து சிதறுவதும் நடந்து தான் வருகிறது.இரண்டு பேரில் யார் சரி தவறு என்பதை சொல்ல விரும்பவில்லை ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பது உண்மைதான் என கூறியுள்ளார்.