“ஈஸ்வரி…..உன் புள்ள ஒன்னும் அவளோ யோக்கியம் இல்ல”!! கொந்தளித்த ராமமூர்த்தி!!

வெளியிட்டது

விஜய் டிவியின் தற்போதைய பரபரப்பான தொடர் “பாக்கியலட்சுமி”. பல்வேறு கோணங்களில் சென்ற இந்த தொடர் திடீரென கோபி ராதிகா என்று ஒரு தனி ட்ராக் உருவாக்கி அதுமுதல் மிக பெரிய வெற்றியையும், மக்களிடம் ஆதரவையும் பெற்று வருகிறது. மிகவும் பரபரப்பாக சென்றுகொள்ளும் இந்த தொடர் இப்பொது மற்றொரு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.  திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஈஸ்வரி.....உன் புள்ள ஒன்னும் அவளோ யோக்கியம் இல்ல"!! கொந்தளித்த ராமமூர்த்தி!! 1

ஊரிலிருந்து வந்த குன்னக்குடியை சேர்ந்த மூர்த்தி கோபி ராதிகாவுடன் இருப்பதை பார்த்து கோபமுற்று அவரிடம் இதனை குறித்து கேட்கிறார். ஆனால் இதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாத கோபி, ஊருக்கு கிளம்பும் மூர்த்தியை மிரட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

நேராக ராதிகாவிடம் சென்று நீங்கள் திருமணம் செய்து கொள்ள போற கோபி நல்லவர் இல்லை என மட்டும் பொரி வைத்து  பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். விஷயம் தெரிந்த மூர்த்தியின் மனைவி தனமும் பாக்கியவிடம் பார்த்து இருந்துக்கோங்க என கூறி ஊருக்கு சென்று விடுகிறார்கள். உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா பாக்கிய டீச்சருக்கு தான் துரோகம் செய்ய கூடாது என்பதற்காக கோபியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விடுகிறார். கோபி எவ்வளவோ முயன்றும் ராதிகா ஒப்புக்கொள்வதாக இல்லை. அறிவில்லாமல் பாக்யா நடுவில் அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும் என உண்மையை தட்டிக்கேட்ட நினைக்கும் அவளுடைய மகனிடம் கண்ணீர் மல்க கூறுகிறாள்.

ஆனால் பாகியாவிற்கு துரோகம் செய்யாமல் இருக்க நினைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறாள். தன்னுடைய அம்மா மற்றும் கோபியின் இஷ்டத்திற்கு இருக்க அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்யலாம் என்ன யோசித்து வரும் ராதிகா, தீர்க்கமான முடிவாக சென்னையை விட்டு சென்று கோபியை விட்டு விலக முடிவு செய்கிறாள். செல்வதற்கு முன் பாக்கியாவிடம் பேச நினைக்கும் ராதிகா, பாக்கியவை கோவிலுக்கு வர சொல்லி பேசுகிறாள். அப்போது, “டீச்சர் நான் ட்ரான்ஸபெர் வாங்கிக்கொண்டு மும்பை செல்லவிருக்கிறேன்” என கூறுகிறாள், என வயிற்று என பாக்கிய கேட்க, “இங்கு கொஞ்சம் செட் ஆகல டீச்சர் அதன்” என்கிறாள்,”மேலும் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் முடிந்து விட்டதா என கேட்க, “அதன் எனக்கும் தெரியல” என பாக்கிய கூறுகிறாள்.

பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், இந்த விஷத்தை கோபியின் குடும்பத்தாரிடம் கூறிவிட வேண்டும் என்ற முடிவில் அவர்கள் வீட்டிற்கு சென்று “உங்க புள்ளைக்கு தான் குடும்பம் இருக்கே…எதுக்கு  என் பொண்டாட்டி வீட்டில் இருக்கான்,” என கூற இதனை கேட்டு அதிர்ச்சியாகும் கோபியின் தாயார் அவன் கூறுவதை நம்ப மறுக்கிறாள். கோபியின் மகன் எழில் ராஜேஷை வெளியே இழுத்துட்டு வந்து “அப்பாக்கு முன்னாடி பழக்கம் இருந்துச்சு..ஆனா இப்போ இல்ல, என கூற, ராஜேஷ் “இந்த இத பாரு” என கோபி ராதிகா காலில் விழுந்து அழுகும் விடியோவை காண்பிக்கிறான். அதிர்ச்சியில் உறைகிறான் எழில்.

இந்த சம்பவம் குறித்து எழிலிடம் கதறி அழுது கொண்டே முறையிட்டு கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கூட பொறுக்க முடையதா ராமமூர்த்தி கொந்தளித்து போய், “ஈஸ்வரி கொஞ்ச நேரம் நிறுத்து…உன் கவலை படுற அளவிற்கு உன் புள்ள யோகியும் இல்ல, அவன் இனொரு பொம்பள கூட தொடர்புல தான் இருக்கான்” என கூறிவிடுகிறார். இதனின் கேட்கும் ஈஸ்வரி நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைகிறாள். அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது என தெரியவில்லை. இவ்வாறாக இந்த வாரம் நகர இருக்கிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy- VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்