“இனிமே உங்ககிட்ட ஏமாற நான் தயாரா இல்ல” !! காலில் விழுந்து கெஞ்சியும் கோபி வீட்டை விட்டு துரத்திய ராதிகா!! செய்யவதரியாமல் திடுக்கிட்டு நிற்கும் கோபி!!

வெளியிட்டது

விஜய் டிவியில் இப்போது முக்கிய தொடராக ரசிகர்களால் கவனிக்கப்படுவது பாக்கியலட்சுமி. திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இனிமே உங்ககிட்ட ஏமாற நான் தயாரா இல்ல" !! காலில் விழுந்து கெஞ்சியும் கோபி வீட்டை விட்டு துரத்திய ராதிகா!! செய்யவதரியாமல் திடுக்கிட்டு நிற்கும் கோபி!! 1

ஊரிலிருந்து வந்த குன்னக்குடியை சேர்ந்த மூர்த்தி கோபி ராதிகாவுடன் இருப்பதை பார்த்து கோபமுற்று அவரிடம் இதனை குறித்து கேட்கிறார். ஆனால் இதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாத கோபி, ஊருக்கு கிளம்பும் மூர்த்தியை மிரட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

நேராக ராதிகாவிடம் சென்று நீங்கள் திருமணம் செய்து கொள்ள போற கோபி நல்லவர் இல்லை என மட்டும் பொரி வைத்து  பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். விஷயம் தெரிந்த மூர்த்தியின் மனைவி தனமும் பாக்கியவிடம் பார்த்து இருந்துக்கோங்க என கூறி ஊருக்கு சென்று விடுகிறார்கள்.

உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா பாக்கிய டீச்சருக்கு தான் துரோகம் செய்ய கூடாது என்பதற்காக கோபியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விடுகிறார். கோபி எவ்வளவோ முயன்றும் ராதிகா ஒப்புக்கொள்வதாக இல்லை. அறிவில்லாமல் பாக்யா நடுவில் அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும் என உண்மையை தட்டிக்கேட்ட நினைக்கும் அவளுடைய மகனிடம் கண்ணீர் மல்க கூறுகிறாள்.

தன்னுடைய நீண்ட நாள் காதலியை எப்படியாவது திருமண செய்து கொள்ள வேண்டும் என்பதால், மீண்டும் மீண்டும் ராதிகாவிடம் சென்று பேசி பார்த்து வருகிறான் கோபி. ராதிகாவின் அம்மாவும் “நீ நிச்சயம் என ஆனாலும் சரி கோபியை திருமண செய்துகொள்ள வேண்டும் என கூறி வறுபுறுத்த, ராதிகா “தெரிந்தே என்னால் பாக்கிய டீச்சறுக்கு அப்படி ஒரு துரோகத்தை ஒரு காலமும் செய்ய முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறாள்.

இருப்பினும் விடாத கோபி, “ப்ளீஸ் ராதிகா என்ன எப்படியாவது கல்யாணம் செய்து கொள்” என காலில் விழுந்து கெஞ்சுகிறான். கோவம் தலைக்கேறிய ராதிகா, கோபியின் சட்டையை பிடித்து அவனை வீட்டை விட்டே வெளீயே துரத்துகிறாள், “என் வாழ்க்கையில் இனிமேல் உன்னிடத்தில் என்னால் ஏமாற முடியாது” என கூறி அவனை வெளியே போ என சொல்லி சென்றுவிடுகிறாள்.

இப்பொது என செய்வது என்று தெரியாமல் நிற்கிறான் கோபி, அப்போது அங்கு வரும், ரத்திகாவை ஒருதலையாக காதலிக்கும் அவனை, கோபத்துடன் கோபி தாறுமாறாக அடித்து துவைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இவ்வாறாக இந்த வாரம் நகர இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கதை இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Courtesy – VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்