இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மிரள். இந்த படம் பற்றி பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். பாய்ஸ் படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் இவருக்கு திருப்புமைனையாக அமைந்த படம் என்றால் அது எம்டன் மகன் தான். இதற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜோடி நம்பர் 1 சீசன்களில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். இவர் தற்போது மிரள் படத்தில் நடித்து முடித்துள்ளார். வாணி போஜனுடன் இணைந்து த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது இந்த படம். இவர்களுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், காவியா அறிவுமணி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபுவின் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இவர்கள் ஏற்கனவே ராட்சசன் படத்தை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து த்ரில்லர் படங்களை தயாரித்து வரும் டில்லி பாபு பரத்தின் மிரள் படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை எம். சக்திவேல் இயக்கியிருக்கிறார். இந்த படம் திருநெல்வேலி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. காற்றாலை தொழிற்சாலைகளில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை சுற்றியே கதை நகர்கிறது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது.
படம் குறித்த பாசிட்டிவான விமர்சனங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை நீங்களும் பார்க்க..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Bingoo Box