களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகியவர் ஓவியா. இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மசாலா கஃபே படத்திலும் நடித்து இருந்தார். இப்படமும் இவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இதனை தொடர்ந்து முன்னணி நடிகையாக ஓவியா உருவெடுத்தார். தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது நல்ல மனதால் பல ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தார். பின்னர் படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் ஓவியா தொடர்ந்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.
இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.மேலும் குடி பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் அறிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஓவியவா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.