பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் அசல் கோளாறை பொம்பளை பொறுக்கி என்றும், அவரை வீட்டை விட்டே வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றது. பெண் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 6ல் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்கள் இந்த முறை பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் பெயர்களை நினைவில் வைக்க கூட சற்று கடினமாக இருக்கிறது. பலருக்கும் திரையில் முகம் தெரியும் வாய்ப்பும் இல்லாமல் போகிறது. ப்ரோமோவில் கூட அவர்கள் வருவதில்லை் ஆனால் பெயரிலேயே வித்தியாசமாக இருக்கும் அசல் கோளாறு என்பவர் நடவடிக்கை தற்போது வைரல் ஆகி வருகிறது.

வசந்த் குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் அசல் கோளாறு. இவர் சென்னையைச் சேர்ந்தவர். கானா பாடல்களை சற்று வேகமான பீட்டுடன் பாடி பிரபலமானவர். குறிப்பாக “ஜோர்த்தாலே” என்கிற பாட்டை இவர் தான் பாடியிருக்கிறார். இந்த பாட்டு மிகப் பிரபலமானதால் இவருக்கும் பிரபலம் கிடைத்தது் மேலும் இவர் சந்தோஷநாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்றவர்களுடன் இணைந்து பாடல்களை பாடி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் சுந்தர்.சி இயக்கும் “காப்பி வித் காதல்” படத்திலும், ஒரு பாடலை இவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயதே ஆகும். இவர் பிக்பாஸ்ஸில் உள்ள பெண்கள் மீது சற்று அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.
குறிப்பாக நேற்று கமலின் நிகழ்ச்சி முடிந்து விக்ரமனிடம் குயின்சி ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவரது முழங்கையை பிடித்து தடவிக் கொண்டிருக்கிறார். குயின்சி அசலின் கையை பிடித்து தள்ளிய போதும், விடாமல் அவர் அப்படி செய்து கொண்டே இருந்தார். பின்னர் ஆயிஷாவின் பின்புறமாக சென்று அவரின் கையையும் தடவுகிறார். பிறகு இரவு நேரம் நிவாசினியுடன் நீச்சல் குளம் அருகே படுத்துக்கொண்டு தனக்கென்று யாரும் இல்லை என்று சிம்பதி உருவாக்கும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார் ய. இவரின் இந்த செயல்கள் இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. பலரும் அசல் கோளாறுக்கு எதிராக மீம்ஸ்களை போட்டு அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவரை பொம்பளை பொறுக்கி என்று விமர்சித்து வருகின்றனர்.
பல கோடி பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இதுபோன்று பெண்களிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இவனை முதலில் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.