Categories: உலகம்

21 வயது கீழானோர்க்கு செல்போன் பயன்படுத்த தடை மசோதா

அமெரிக்க செனட் சபையில், வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.

21 வயது கீழானோர்க்கு செல்போன் பயன்படுத்த தடை மசோதா 1
ஜான் ரோட்ஜர்ஸ்

அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தொழிநுட்ப வளர்ச்சி கணிக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அனைவரின் கைகளிலும் இன்று கைபேசிகள் இருப்பதால் நம்முடைய தொடர்பு நிலைகள் வலுவானதாகவே இருந்து வருகிறது. ஆனால் அதே வேளையில், சிறார்கள் கையில் இந்த கைபேசிகள் புழங்கி வருவதால், பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தான் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், “இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை, ஒரு விழிப்புணர்வுக்காகவே தாக்கல் செய்தேன்“ என்று செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்