ஒரு youtube சேனலில் வெளிவந்த ‘ஆஹா கல்யாணம்’ என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரிகிடா. தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் நடிப்பிலேயே பல ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்திருந்தார். இவர் பார்த்திபன் இயக்கியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிவதற்கு சென்றார். ஆனால் இவரின் திறமையை பார்த்த பார்த்திபன் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். பிரிகிடாவும் தனது முழுமையான நடிப்பையும் வெளிப்படுத்தி மிக சிறந்த நடிகை என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார். இரவின் நிழல் படத்தில் ஒரு சீனில் 19 நொடிகளில் உடையை மாற்றிக்கொண்டு நடித்து இருந்தார் பிரிகிடா.

அப்படி திரைத்துறையில் வந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்து, அதிலும் சிறிது வெற்றி பெற்ற பிரிகிடா சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அவர் சேரி மக்கள் இப்படித்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்று ஒரு பேட்டி கொடுத்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அப்போது நெட்டிசன்கள் அவரை வச்சி செய்து விட்டனர். இதன் பின்னர் அவர் பல இடங்களில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டபோதும், அவரை தொடர்ந்து விமர்சித்து மீம்ஸ்களை போட்டு வந்தனர் நெட்டிசன்கள். தற்போது அந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த பிறகு தான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார். சில படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தியும் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது அவர் அது போல் ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7