குடியுரிமைச் சட்டம் மக்களை பிளவுபடுத்துகிறது – ஐரோப்பிய நாடாளுமன்றம்

வெளியிட்டது

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மிகப் பெரிய ஆறு குழுக்களின் இறுதி வரைவுத் தீர்மானம் புதிய இந்திய குடியுரிமைச் சட்டம் இயற்கையில் பாரபட்சமானது மற்றும் ஆபத்தான முறையில் பிளவுபடுத்துவதாகக் கூறியுள்ளது.

இது தொடர்பாக பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளனர், இந்த விவகாரங்களில் ஒரு முக்கியமான வாக்கெடுப்பு விவாதங்களுக்குப் பிறகு இந்த வாரம் நடைபெறும். காஷ்மீரில் உள்ள தடைகள் மற்றும் இதுபோன்ற பிரச்சினைகள் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவை பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சினைகள் முற்றிலும் உள்விவகாரம் மேலும் இந்த பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளன என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளில் வாக்களிப்பதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடெல்லியுடன் பேச்சுவார்த்தை ஈடுபட வேண்டும். பிரச்சினைகள் குறித்த சரியான மதிப்பீட்டை அவர்களுக்கு நாங்கள் வழங்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன

Faiyas Khan

தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு :) நண்பர்களே உங்களக்கு நியூஸ் புடிச்ச ஷேர் பண்ணுங்க Hailing from the bustling streets of Chennai, I bring you the juiciest tidbits and exclusive insights from the heart of Tamil entertainment, because nobody knows the industry like a true Chennaiite.

வெளியிட்டது

புதிய செய்திகள்