Categories: சினிமா

தற்கொலை அல்ல கொலை…சித்ராவின் மரணம் குறித்து பேசிய நடிகை ரேகா நாயர்.

வெளியிட்டது

விஜய் டிவி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பிடித்தமான நடிகையாக வலம்  வந்தவர் நடிகை சித்ரா. அவருடைய முல்லை கதாபாத்திரம் பலருக்கும் ஃபெவரட். அவருடைய திடீர் மரணம் யாராலும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவர் தன்னுடைய ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியது. வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய தற்கொலைக்கு காரணமாக கணவர் ஹேமந்த் தான் என சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தனர். அந்த வழக்கில் ஹேமந்த ஜாமினில் வெளி வந்து விட்டார். சித்ராவும் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால்  இன்று அவரை அவர் மரணம் தற்கொலையா இல்லை கொலையா என விடை கிடைக்கவில்லை.  தற்கொலை அல்ல கொலை...சித்ராவின் மரணம் குறித்து பேசிய நடிகை ரேகா நாயர். 1

இந்த சூழ்நிலையில் நடிகை சித்ராவின் நண்பரான மற்றொரு சின்னத்திரை நடிகை ரேகா நாயர், சித்ராவின் மரணம் குறித்து தற்போது பரபரப்பான தகவல்கை தெரிவித்து உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது, சித்ராவினுடையது தற்கொலை அல்ல கொலை என கூறி உள்ளார்.

அதற்கு காரணம் சித்ராவின் கணவர் ஹேமந்த தான் என சில ஆதாரங்களோடு பேசி உள்ளார். ஹேம்நாத் இப்பொது சித்ராவின் மரணத்திற்கு சில அரசியல்வாதிகள் தான்  காரணம், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறுவது எல்லாம் சுத்த பொய், அவனுக்கு பல இடங்களில் கடன் உள்ளது, அதிலிறுத்து தப்பிக்க இப்போ வேறு கதைகள் கூறி வருகிறார்.

சித்ரா மட்டும் இல்லை, இப்பொது அவள் மரணத்திற்கு பிறகு அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது, அந்த புகைப்படங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. இவனை போன்றோர்கள் தப்பிக்க கூடாது, அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

Video Courtesy – behindwoods air

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்